LATEST NEWS
BREAKING: உங்கள் ஊர் கணக்கு வழக்கு பார்க்க ரெடியா..? நாளை தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டம்..! கேள்வி கேட்க தயாராகுங்கள் மக்களே..!!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் கிராமத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தல், புதிய வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு முடிவு செய்தல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள்/குறைகளைத் தீர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 சிறப்பு நாட்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் நடைபெறவுள்ள இச்சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு குரல்கொடுக்குமாறு அமைச்சர் N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
