CRIME
“99 பிஞ்சுக் குழந்தைகள்… பெயரே இல்லாமல் புதைக்கப்பட்ட கொடூரம்.. !” DNA கொடுத்த மாஸ் க்ளூ.. பல ஆண்டுகளுக்குப் பின் உடைந்த பேரதிர்ச்சி ரகசியம்..!!
அயர்லாந்தின் டுவாம் பகுதியில் இயங்கிவந்த முன்னாள் “Mother and Baby Home” வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடயவியல் அகழாய்வில், இதுவரை 99 குழந்தைகளின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 1925 முதல் 1961 வரை செயல்பட்ட இந்த இல்லத்தில், திருமணமாகாத பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தங்க வைக்கப்பட்ட நிலையில், போதிய பராமரிப்பின்றி உயிரிழந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு முறையான அடக்கப் பதிவுகள் இல்லாதது வரலாற்று ஆய்வுகள் மூலம் அம்பலமானது. இதனையடுத்து, அயர்லாந்து அரசு சர்வதேச தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து முழுமையான அகழாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
மீட்கப்பட்ட பிஞ்சுகளின் உடல் எச்சங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தங்கள் பிள்ளைகளின் தகவலுக்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோரின் மரபணுக்களோடு அவற்றை ஒப்பிட்டு அடையாளம் காணும் தீவிர அறிவியல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. சமூக அவமானம் என்ற பெயரில் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொண்டு, தசாப்தங்களாக பெயரற்ற எலும்புக்கூடுகளாக மண்ணில் மறைந்திருந்த குழந்தைகளுக்கு மீண்டும் உரிய அடையாளத்தையும் மரியாதையையும் மீட்டெடுக்கும் இந்த நடவடிக்கை, அயர்லாந்தின் வரலாற்று நீதியாகவும் உலகளாவிய மனிதநேயத்தின் முக்கிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது.
