CINEMA
யாரும் எதிர்பார்க்காத திடீர் திருமணம்…காதல், நிச்சயதார்த்தம் எதுவுமே இல்லை…38 வயதில் சீரியல் நடிகைக்கு நடந்த திருமணம்…ஜீ தமிழ், விஜய் டிவி பிரபலங்கள் ஒன்று கூடிய பிரம்மாண்ட திருமணம்…!
சின்னத்திரை ரசிகர்களுக்குப் பெரிய இன்ப அதிர்ச்சியாக, ஜீ தமிழ் ‘அயலி’ சீரியலின் கதாநாயகன் ஆனந்த் சிவாவுக்கும், பிரபல சீரியல் நடிகை சமந்தா கிரணுக்கும் இன்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தங்களது காதல் அல்லது நிச்சயதார்த்தம் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி, இன்று திடீரெனத் திருமணக் கோலத்தில் காட்சியளித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
மணமகனான ஆனந்த் சிவா, ஜீ தமிழின் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது ‘அயலி’ தொடரில் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக களமிறங்கியபோது, “இவரெல்லாம் ஹீரோவா? அதற்குரிய லுக் இல்லை” எனச் சமூக வலைதளங்களில் கடுமையான உருவக் கேலிகளையும் விமர்சனங்களையும் சந்தித்தார். இதுகுறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில், ஆரம்பத்தில் இந்த விமர்சனங்கள் தன்னை காயப்படுத்தியதாகவும், ஆனால் தற்போது ரசிகர்கள் தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டதே தனக்குக் கிடைத்த பெரிய சந்தோஷம் என்றும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். விமர்சனங்களைக் கடந்து இன்று அவர் நிஜ வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
மறுபுறம் மணமகள் சமந்தா கிரண், பல ஆண்டுகளாகத் தமிழ் சீரியல்களில் குணச்சித்திர மற்றும் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தற்போது 38 வயதில் அவர் திருமணம் செய்துகொண்டிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்தாலும், “வயதை விட மகிழ்ச்சியான வாழ்க்கையும், சரியான துணையும்தான் முக்கியம்” எனக் கூறி ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி எனப் பல முன்னணி சேனல்களின் நட்சத்திரங்கள் நேரில் திரண்டு வந்து வாழ்த்திய இவர்களது திருமணப் புகைப் படங்கள், “ரீல் ஜோடிகளை விட இந்த ரியல் ஜோடி கொள்ளை அழகு” என்ற கமெண்ட்டுகளுடன் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
