LATEST NEWS
முந்தைய திமுக அரசின் தவறையே செய்கிறாரா முதல்வர் விஜய்…? ஆட்சிக்கு வந்து 3 மாதத்திற்குள் கூட்டணிக்குள் வெடித்த மோதல்… கலக்கத்தில் தவெக தலைமை….!!
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாநிலத்தின் 12 மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட ஆய்வு டெண்டரைக் கோரியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தின் போது, போதிய வருவாயும் வேலை பாதுகாப்பும் இன்றிப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவளித்த முதலமைச்சர் விஜய், தங்களின் ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேறும் என உறுதியளித்திருந்தார்.
ஆனால் தற்போது முந்தைய திமுக அரசாங்கத்தின் அதே பாணியைத் தவெக நிர்வாகமும் கையில் எடுத்துள்ளதாகக் கூறி, தவெக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளன. இந்தத் தனியார்மயமாக்கல் ஒப்பந்தப் புள்ளியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இடதுசாரித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆட்சி அமைந்து 3 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் இந்தத் திடீர் போர்க்கொடி முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் விசிக, ஐயுஎம்எல் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தவெக ஆட்சி நீடிப்பதற்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரை எவ்வித அரசியல் நெருக்கடியும் இன்றி ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தைப் பெரிய போராட்டமாக மாற்றுவதை விரும்பவில்லை. இதனால், தூய்மைப் பணியாளர்களின் டெண்டர் விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் அவர் மீண்டும் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிகிறது.
