LATEST NEWS
OMG: எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு.. தாய்நாட்டிற்கு திரும்பும் இந்திய வீரரின் உடல்.. நெகிழவைக்கும் பின்னணி..!!
எவரெஸ்ட் சிகரத்தின் மிக அபாயகரமான 8,500 மீட்டர் உயரத்தில் உள்ள “டெத் ஜோன்” பகுதியில், கடந்த 30 ஆண்டுகளாக உறைந்து கிடந்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர் லான்ஸ் நாயக் டோர்ஜே மோரப்பின் உடலை மீட்கும் பணிகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூரமான பனிப்புயலில் சிக்கி அவர் உயிரிழந்தார். அவர் அணிந்திருந்த பிரகாசமான பச்சை நிற மலையேற்றப் பூட்ஸ் காலணிகள் காரணமாக, எவரெஸ்ட் ஏறும் உலகெங்கிலும் உள்ள மலையேற்ற வீரர்களால் அவரது உடல் “கிரீன் பூட்ஸ்” என்ற அடையாளக் குறியீடாகவே பல தசாப்தங்களாக அழைக்கப்பட்டு வந்தது.
டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவரது அடையாளம் அண்மையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உயர்தர ஆபத்தான மீட்புப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகளை ஐடிபிபி வெளியிட்டுள்ளது. எவரெஸ்ட்டின் திபெத் பகுதியில் சீனா கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு வழித்தடத்தில் இந்த உடல் உள்ளதால், சீன அதிகாரிகளின் முறையான அனுமதி மற்றும் சாதகமான வானிலையைப் பொறுத்து திறமை வாய்ந்த ஷெர்பா நிபுணர்களின் உதவியுடன் இந்த மீட்புப் பணி ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும் இப்பகுதியில் இருந்து உடலை மீட்பது எவரெஸ்ட் வரலாற்றிலேயே மிகக் கடினமான பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அனைத்து சட்ட நடைமுறைகளும் மற்றும் மீட்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தால், வீரர் டோர்ஜே மோரப்பின் உடல் அக்டோபர் 2026-க்குள் டெல்லிக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டிற்குத் திரும்பும் இந்தத் தியாக வீரரின் உடலுக்கு முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உன்னத முயற்சி பல தசாப்தங்களாகக் காத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.
