LATEST NEWS
“வேஷ்ட்டி, சேலை” முதல்வர் விஜய்யின் தீபாவளி பரிசு…. முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!
தமிழக முதலமைச்சர் விஜய், கடந்த பொங்கல் பண்டிகையின் போது விநியோகிக்கப்பட்டு மீதமுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளை, வரும் தீபாவளி பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளர்களுக்குப் பரிசாக வழங்க அதிரடி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேஷன் கடைகள் மூலமாக இந்த உபரி வேட்டி, சேலைகளைத் தகுதியான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் தயாரித்து வழங்குவதற்காக ரூ. 300 கோடி நிதியை ஒதுக்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த இடைக்காலத் தீபாவளி பரிசு அறிவிப்பானது, அரசின் சேமிப்பில் உள்ள துணிகள் வீணாகாமல் முதியோர்களுக்கு உரிய நேரத்தில் பயன் தரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
