TRENDING
80களின் டாப் நாயகி நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகிய மகளா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
நடிகை ரேகா ஒருகாலத்தில் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். 1970ல் கேரளத்தில் பிறந்த நடிகை ரேகா, தன் 16 வயதிலேயே சத்தியராஜ்க்கு ஜோடியாக கடலோர கவிதைகள் படத்தில் நடித்தார். பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

முதல் படத்திலேயே அவர் ஏற்றுநடித்த டீச்சர் பாத்திரம் வெகுவாகப்பேசப்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்தார் நடிகை ரேகா. நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன், புன்னகை மன்னன், புரியாத புதிர், பொம்முக்குட்டி அம்மாவுக்கு என இவர்நடித்த பல படங்கள் மெகா ஹிட் அடித்தன.
1996ல் மீன் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஜார்ஜை திருமனம் செய்தார் ரேகா. இந்தத் தம்பதியின் மகள் அனுஷா சென்னையில் உள்ள தனியார்கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இப்போது ரேகாவின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட அனுஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
