LATEST NEWS
லண்டனில் முக்கிய பிரபலத்தை கட்டியணைத்து புகைப்படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ஒரு பக்கம் படங்களை இயக்கி வர மறுபக்கம் சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சி என பிசியாக இருந்து வருகிறார்.
எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லண்டன் சென்றுள்ள நிலையில் அங்கு நடிகை சுகாசினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். சுகாசினியை கட்டி அணைத்து மிக நெருக்கமாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
