திமுக-வை ஓரங்கட்டிய மக்கள்…இனி தமிழ்நாட்டில் தவெக மட்டும்தான்…எதிர்காலத்தில் போட்டியே இருக்காது…தவெக பொதுக்கூட்டத்தில் நடிகர் ஜெய் பேசிய அதிரடிப் பேச்சு…! – cinefeeds
Connect with us

CINEMA

திமுக-வை ஓரங்கட்டிய மக்கள்…இனி தமிழ்நாட்டில் தவெக மட்டும்தான்…எதிர்காலத்தில் போட்டியே இருக்காது…தவெக பொதுக்கூட்டத்தில் நடிகர் ஜெய் பேசிய அதிரடிப் பேச்சு…!

Published

on

நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, தான் எதிர்கொண்ட முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய். முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் இன்று (ஜூன் 22) என்பதால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் இதனைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, முதலமைச்சர் விஜய் நேராகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு மக்கள் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது, “ஒன்று திமுக.. இன்னொன்று தவெக; தீய சக்தி திமுக வேண்டுமா? தூய சக்தி தவெக வேண்டுமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” எனத் தவெக தலைவர் விஜய், அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசி வந்தார். ஆனால் திமுகவோ விஜய்யைக் கண்டுகொள்ளாமல், அதிமுக மற்றும் பாஜகவை மட்டுமே பிரதான எதிரியாகக் கருதிப் பிரச்சாரம் செய்தது. இறுதியில், தேர்தல் முடிவுகள் தவெகவுக்குச் சாதகமாக அமைந்து விஜய் முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றினார். இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகரும், அவரது தீவிர ரசிகருமான ஜெய் பேசிய வாழ்த்துப் பேச்சு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement

அந்த விழாவில் பேசிய நடிகர் ஜெய், “இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்று விஜய் அண்ணா பிரச்சாரத்தில் கூறுவார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு போட்டியே இருக்காது போலத் தோன்றுகிறது; தவெக மட்டும்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது” என்று உணர்ச்சிப்பொங்கப் பேசினார். ஜெய்யின் இந்த அதிரடியான பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “முதலமைச்சர் விஜய்க்கே அல்டிமேட்டாக ஐஸ் வைக்கும் அளவுக்கு ஜெய் வாழ்த்து சொல்லியிருக்காரேப்பா!” என்று சமூக வலைத்தளங்களில் விதவிதமாகக் கமெண்ட் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in