CINEMA
BREAKING:ஓய்ந்தது தென்னிந்தியாவின் ‘பாடும் குயில்’… அரசு மரியாதையுடன் எஸ்.ஜானகி உடல் தகனம்..!!
மாரடைப்பு காரணமாகத் தனது 88-வது வயதில் காலமான புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கனியனஹுண்டியில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தெலுங்கு பிராமண முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் பக்தி சிரத்தையுடன் நடைபெற்றன. இந்தியத் திரையிசை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இப்பேரரசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கர்நாடக அரசு சார்பில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மறைந்த பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகக் கர்நாடக மாநில அமைச்சர்கள், தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணிப் பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது பண்ணை வீட்டில் திரண்டனர். திரையுலகினரும் பொதுமக்களும் கண்ணீர் மல்க அவருக்குத் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். பல தலைமுறை ரசிகர்களைத் தனது தேன் குரலால் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் இசைக் குயிலின் மறைவு, ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் இசை ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
