CINEMA
கடந்த 2 ஆண்டுகளாக கடும் மன உளைச்சலில் விஜய்…ஆகஸ்ட் 7-ல் நீதிமன்றம் எடுக்கப்போகும் அதிரடி முடிவு…தனி ஆளாக நின்ற விஜய்… துரோகமா? சதியா? சோகத்தில் இருந்த மகனைப் பார்த்து கதறிய தாய் ஷோபா…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்சினை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த மனு அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களின் பிரபலம் காரணமாக காணொலி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு இருதரப்பும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குத் தேவையான மின்னஞ்சல் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் அவர்கள் இணைவார்களா அல்லது பிரிவார்களா என்பது தெரியவரும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய்யின் மனநிலை மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து தன்னிடம் பேசியபோது தங்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்றும், சினிமா வேறு அரசியல் வேறு என்பதால் நன்றாக யோசித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குடும்ப ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விஜய் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் தனக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாகக் கூறிய ஷோபா, விவாகரத்து விவகாரத்தின் போது விஜய் கடுமையான மன உளைச்சலிலும் (Upset) சோகத்திலும் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் தனி ஆளாக நின்று இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி விஜய் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக ஷோபா பெருமிதம் தெரிவித்துள்ளார். “விஜய்க்கு வீண் வாக்குவாதங்கள் செய்வது பிடிக்காது; எதற்கும் வாயால் பதில் சொல்வதை விட, அதைத் தன் செயலில் காட்ட வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார்” என்று தன் மகனின் மனவலிமையைப் பாராட்டியுள்ளார். குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் களம் சார்ந்த விமர்சனங்கள் என அனைத்தையும் தனது மௌனத்தாலும் உழைப்பாலும் விஜய் எதிர்கொண்டு வருகிறார் என்பது அவரது தாயாரின் பேட்டி மூலம் தெளிவாகியுள்ளது.
