CINEMA
“அடச்சீ.. நீயெல்லாம் ஒரு தாயா.. ?” குழந்தையைத் தூக்கி வீசி கொலை.. ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்த தாய்.. விசாரணையில் வெளிவந்த பதறவைக்கும் உண்மைகள்..!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் அதன் தாயான டடியானா நார்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29 அன்று லேக்லாந்தில் உள்ள அவரது வீட்டில் குழந்தை ஜெரெமியா பீட்டர்ஸ் சுயநினைவின்றி கிடந்த நிலையில் போலீசார் மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை உயிரிழந்தது. ஆரம்பத்தில் குழந்தை படுக்கையிலிருந்து கீழே விழுந்ததாகவும், பின்னர் தானோ அல்லது தனது கணவரோ தவறுதலாக குழந்தையின் மீது உருண்டு விழுந்திருக்கலாம் என்றும் நார்மன் முரண்பட்ட விளக்கங்களை அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் பிரேதப் பரிசோதனையில் குழந்தைக்கு ஒருமுறை விழுந்ததால் ஏற்பட முடியாத அளவுக்கு கடுமையான காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அன்று குழந்தை பலமுறை கீழே விழுந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் குழந்தையை விளையாட்டுத் தொட்டிலுக்குள் தூக்கி எறிந்ததாகவும் நார்மன் ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தையின் தொடையில் இருந்த காயமும் வெந்நீரால் ஏற்பட்டதல்ல, கடுமையான வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டது என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தை விளையாட்டுத் தொட்டிலின் கடினமான அடிப்பகுதியில் விழுந்ததால் தலையிலும் முதுகிலும் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குழந்தைக்கு காயம் ஏற்பட்ட பிறகும் உடனடியாக மருத்துவ உதவியை நாடாமல், அதன் அறிகுறிகளை இணையத்தில் தேடிய நார்மன், பின்னர் பல மணி நேரம் டிக்டாக் வீடியோக்களையும் ஆபாச இணையதளங்களையும் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்த நிலையிலும் அவர் அவசர உதவியை நாடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நார்மன் மீது கடுமையான குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், வழக்கில் மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
