தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனிமையில் இருக்க ஆசைப்பட்டு இமாச்சல் பிரதேசம் சென்றுள்ளார்.

அங்குள்ள இமயமலை உச்சியில் டென்த் போட்டு மெடிடேஷன் செய்தும் புத்தகம் படித்து சாப்பிட்டும் நாட்களைப் போக்கி வருகிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் காதலருடன் பிரேக் அப் தானாக என கேள்வி கேட்டு வருகின்றனர்.