LATEST NEWS
இளம் வயதில் கொடூரமாக உயிரிழந்த நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!
இந்திய சினிமாவில் ஏராளமான நடிகைகள் அறிமுகமாகி புகழின் உச்சத்திற்கு சென்று உள்ளனர். அதிலும் ஒரு சிலர் அப்படியே தலைகீழாக ஒரு திரைப்படத்திலேயே காணாமல் போய்விடுவார்கள். அதேசமயம் ஒரு சிலர் மரணத்தால் அவர்களின் பெரிய முடிவுக்கு வருவது வேதனையான ஒன்றுதான். அப்படி இளம் வயதில் உயிரிழந்த தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
சில்க் ஸ்மிதா:
இன்று வரை இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. ஆந்திராவில் பிறந்த இவர் பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சௌந்தர்யா:
கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் இவர் உயிரிழந்தார்.
நடிகை மோனல்:
நடிகை சிம்ரனின் உடன்பிறந்த தங்கையான இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு இவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்த்தி அகர்வால்:
தமிழில் பம்பரக் கண்ணாலே என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ள நிலையில் இதனைத் தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் உடல் எடையை குறைப்பதற்காக சில சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் நாளடைவில் அது பிரச்சினையாக மாறி 2015 ஆம் ஆண்டு தன்னுடைய 31 வயதில் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்.
நடிகை விஜி:
கோழி கூவுது விஜி என்று அழைக்கப்படுபவர் தான் இவர். இவர் கங்கை அமரன் இயக்கிய கோழிகூவுது திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் இடுப்பு மற்றும் முதுகு வலி காரணமாக ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு பல சிகிச்சைகளுக்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2000 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை சிந்து:
கண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவி சகோதரி தான் சிந்து. இவர் இணைந்த கைகள், பிஸ்தா உள்ளிட்டா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய 33 வயதில் உயிரிழந்து விட்டார். நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனையால் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோனிஷா உன்னி:
தமிழ் சினிமாவில் திராவிடம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன், மூன்றாவது கண் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விபத்தால் உயிரிழந்து விட்டார்.
திவ்யபாரதி:
தமிழில் நிரா பெண் என்ற ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார். அதனைத் தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 19ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆகிய சில நாட்களில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த போது 15ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்து விட்டார்.
ஜியா கான்:
பிரபலமான பிரிட்டிஷ் அமெரிக்க நடிகையான இவர் 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மூன்று படங்களில் நடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டு மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீதேவி:
தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் சினிமாவின் ராணி யாக இருந்த ஸ்ரீதேவி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்த இவர் இறுதியாக புலி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு துபாயில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
