VIDEOS
“கல்வி இருந்தா போதும் ஒரு தலைமுறையே முன்னேறும்”.. நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி… வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகுமார் மற்றும் அவரின் மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து அவர்களின் கனவை நினைவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் மருத்துவர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பல கனவுகளை அடைகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் லட்சியத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். அதில் சிவகுமார் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த வருடம் அகரம் அறக்கட்டளை விழா நேற்று நடைபெற்றது. சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, கல்வி இருந்தா போதும் ஒரு தலைமுறையை முன்னேறும் என்பதற்கு இங்கு இருக்க அனைவரும் தான் உதாரணம் என்று நெகிழ்ச்சியாக பேசினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
#WATCH | “கல்வி இருந்தா போதும் ஒருதலைமுறையே முன்னேறும் என்பதற்கு, இங்க இருக்க எல்லாரும் உதாரணம்”- நடிகர் கார்த்தி
சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார் நடிகர் சூர்யா#SunNews | @Karthi_Offl pic.twitter.com/3IDL1VSojl
— Sun News (@sunnewstamil) July 16, 2023