VIDEOS
“என் ஆத்தா சொன்னத செய்றோம்”… அகரம் விழாவில் நடிகர் சூர்யா எமோஷனல் ஸ்பீச்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகுமார் மற்றும் அவரின் மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து அவர்களின் கனவை நினைவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் மருத்துவர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பல கனவுகளை அடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் லட்சியத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். அதில் சிவகுமார் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த வருடம் அகரம் அறக்கட்டளை விழா நேற்று நடைபெற்றது.
சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய சூர்யா, சமூகத்தில் ஜாதி மதம் என்று இன்னும் ஏற்றத்தாழ்வு உள்ளது என பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க