LATEST NEWS
அலறவிட்ட பெண்மணி..! போலீசாருடன் கடும் வாக்குவாதம்… நடுரோட்டில் படுத்து ரகளை செய்து.. பேரிகார்டுகளை உடைத்து காரில் தப்பிய பகீர் காட்சி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆலந்தி பகுதியில், புகழ்பெற்ற ‘சந்த் ஞானேஸ்வர் மகாராஜ் பால்கி’ எனும் ஆன்மீக ஊர்வலம் தொடங்குவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினர் ஆலந்தியின் பல சாலைகளை மூடி, போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஓட்டி வந்த ஒரு பெண், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறிச் செல்ல முயன்றதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
காரை ஓட்டி வந்த அந்தப் பெண் ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி (Driving School) நடத்தி வருபவர் என்று கூறப்படுகிறது. ஊர்வலப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, அவருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “உங்களுடைய வேலை மட்டும்தான் முக்கியமா, என்னுடையது இல்லையா? நான் மக்களிடம் பணம் வாங்கியுள்ளேன், அவர்களுக்கு ஓட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கத்திய அந்தப் பெண், திடீரென சாலை நடுவே படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர், திடீரென தனது காரில் ஏறிய அந்தப் பெண், காவல்துறையினர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை காரைக் கொண்டு வேகமாக மோதித் தள்ளிவிட்டு, அங்கிருந்த சோதனைச் சாவடியைக் கடந்து அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் காரை ஓட்டிச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலந்தி காவல்துறையினர் காரின் விவரங்களைச் சேகரித்து, அந்தப் பெண் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
