LATEST NEWS
“நீங்கள் சாக்கடைப் புழுக்கள்…” கொடூரமாக திட்டிய பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் 100 மாணவர்கள் செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளியில், மாணவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதோடு, உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதப்பதாகக் கூறி மாணவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்; இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவர்களைப் பார்த்து, “நீங்கள் சாக்கடை புழுக்கள், அதே இடத்தில்தான் சாவீர்கள்” என்றும், “இதைத்தான் உங்களால் பெற முடியும்” என்றும் முதல்வரும், ஆசிரியர்களும் மிகவும் அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர்.
प्रिंसपल छात्रों से कहता है “तुम नाली के कीड़े हो उसी में मर जाओगे”..!
खाने में कीड़े मकौड़े निकलते हैं शिकायत करने पर कहते हैं यहां यही मिलेगा..!
यूपी के कन्नौज जिले में जवाहर नवोदय विद्यालय के छात्रों ने प्रधानाचार्य के खिलाफ घटिया भोजन देने और अभद्र व्यवहार करने का आरोप लगा… pic.twitter.com/1QF5Y3XHqF— Rahul Saini (@JtrahulSaini) August 13, 2026
இதைக் கண்டித்து ஆத்திரமடைந்த சுமார் 100 மாணவர்கள், மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து தங்களது குறைகளைக் கூற வலியுறுத்தி அறையில் தங்களைப் பூட்டிக்கொண்டு நூதன முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்; தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகவும் உணவுப் பாதுகாப்பிற்காகவும் தாங்களாகவே விடுதி அறைக் கதவுகளை அடைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பி வரும் மாணவர்களின் இந்தத் தைரியமான போராட்டம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
