CRIME
“என் மகள் கைகூப்பி அழுதுகிட்டே உதவி கேட்டுருக்கா.. ஆனா டீச்சர் செய்த காரியம்.. 4-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி.. பெற்றோர் உடைத்த உண்மை.. இணையத்தில் நெஞ்சை பதறவைக்கும் வீடிய..!!
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமாய்ரா, கடந்த 2025 நவம்பரில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியெடுத்துள்ளது. இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, அமாய்ராவின் பெற்றோர் தற்பொழுது அவளது மரணத்திற்கு முந்தைய கடைசி நிமிட வகுப்பறை சிசிடிவி வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் போட்டுடைத்துள்ளனர். கடந்த 18 மாதங்களாகப் பள்ளியில் உள்ள சக மாணவர்களால் கடுமையான புல்லிங் கொடுமைகளுக்கும், பாலியல் ரீதியான கெட்ட வார்த்தைகளுக்கும் அந்தச் சிறுமி ஆளாக்கப்பட்டு வந்த நிலையில், இந்த இதயத்தை நொறுக்கும் வீடியோ ஆதாரத்தை அவளது பெற்றோர் தற்பொழுது இணையத்தில் பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், அமாய்ரா சாதாரணமாக வகுப்பறைக்குள் நுழைந்து நடனப் பயிற்சிகளில் ஈடுபடுவதும், சில நிமிடங்கள் கழித்துச் சில மாணவர்கள் ஒரு டிஜிட்டல் சிலேட்டைக் கொண்டு வந்து அவளிடம் காட்டிய பிறகு அவளது முகம் பயத்தாலும் அவமானத்தாலும் அப்படியே மாறுவதும் பதிவாகியுள்ளது. உடனே பதற்றமடைந்த அந்த குழந்தை, கிளாஸ் டீச்சரான பூனிதா சர்மாவிடம் சென்று கைகூப்பி அழுதுகொண்டே உதவி கேட்டு முறையிட்டுள்ளது.
On Nov 1, 2025, Amaira, a Class 4 student, died by suicide after jumping from the fourth floor of the Neerja Modi School in Jaipur.
She had been bullied for 18 months, with classmates targeting her using “bad words,” many of which carried sexual undertones. However, her class… pic.twitter.com/iiS4J6UFwm— THE SKIN DOCTOR (@theskindoctor13) July 9, 2026
ஆனால், அந்த ஆசிரியை குழந்தையைத் தனியாக அழைத்து விசாரித்துத் தேற்றாமல், மற்ற மாணவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மிகவும் கண்டிப்புடனும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டதாக அமாய்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சொல்லொணா மனமுடைந்த அந்தச் சிறுமி, திடீரென வகுப்பறையை விட்டுத் தனியாக வெளியே ஓடியுள்ளார். அமாய்ரா அப்படி அழுதுகொண்டே ஓடியும் கூட, வகுப்பறையில் இருந்த ஆசிரியையோ அல்லது பள்ளியின் ஊழியர்களோ அவளைப் பின்தொடர்ந்து சென்று தடுக்க முயலவில்லை என்ற அலட்சியம் இந்த வீடியோவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தரைத்தளத்தில் இருந்து 48 அடி உயரமுள்ள பள்ளியின் 4-வது மாடிக்கு அந்தச் சிறுமி தனியாகச் செல்லும் வரை யாரும் அவளைக் கண்காணிக்காததால், அங்கிருந்து குதித்து அவள் பரிதாபமாக உயிரிழந்தாள் என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் சௌரப் மோடி, முதல்வர் இந்து துபே மற்றும் ஆசிரியை பூனிதா சர்மா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், செல்வாக்கு மிக்கவர்கள் தலையிட்டு முதல்வரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அமாய்ராவின் தந்தை விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கண்ணீர் வடித்த தாய் ஷிவானி, குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யும் வரை தங்களது நீதிக்கான போராட்டம் ஓயாது எனப் பெற்றோராகக் கதறி அழுதுள்ளனர்.
