TRENDING
செல்போனில் மூழ்கிய தாய்… ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த குழந்தை!… பரிதாப நிலை …..
இரண்டு நாள் முன்பு அடுக்கு மாடி கட்டிடத்தில் 2 வயது குழந்தைக்கு தாய் போன் பேசிகொண்டே சாப்பாடுவூட்டும் பொழுது குழந்தை கை தவறி மாடியிலிருந்து கீழே விழுந்து ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு இருந்தது , ஆனாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது இன்று. சென்னையில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை 2வது மாடியிலிருந்து தவறிவிழுந்து பரிதாப உயிரிழந்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கார்டன் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகீர், மும்தாஜ் தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சையது அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். நேற்று மதியம் ஒன்றரை வயதான இர்பான் வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் 2வது மாடியின் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இர்பான் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான். பொலிசார் வழக்கு பதவி செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த நிகழ்வு தாய் செல்போன் பேசிக்கொண்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது இவ்வாறு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.