LATEST NEWS
கண்ணே பட்டுடும் போலயே..! “அய்யனார் துணை” சீரியல் நாயகன் அரவிந்த் தனது மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோஸ்… இணையத்தில் வைரல்…!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ சீரியல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் ஒரு தொடராகும். இத்தொடரில் தற்போது கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. குறிப்பாக, கதாநாயகி சந்தாவைத் தேடி சேரன், சோழன் மற்றும் நிலா ஆகிய மூவரும் பீகார் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சந்திக்கும் சவால்களும், திருப்பங்களும் நேயர்களைத் தொடர்ந்து சீரியலைப் பார்க்கத் தூண்டியுள்ளது.
சந்தாவின் தந்தை, தன்னிடம் எந்தச் சொத்தும் இல்லை எனச் சொல்லும் சோழனிடம் தன் மகளைத் தர மறுக்கிறார். இதற்குப் பதிலடியாகச் சோழன், “எனக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள், அதற்குள் 25 லட்சம் பணமும், நகையும் தருகிறேன். அப்போது உங்கள் மகளைத் திருமணம் செய்து தருவீர்களா?” எனக் கேட்கும் காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதை இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்கையில், இத்தொடரில் நடிக்கும் நடிகர் அரவிந்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.
சீரியல் பரபரப்புகளுக்கு மத்தியில், நடிகர் அரவிந்த் நிஜ வாழ்க்கையில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. திரையில் குடும்பப் பாங்கான நடிப்பால் ஈர்க்கும் அரவிந்த், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அந்தத் தம்பதிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘அய்யனார் துணை’ சீரியல் அடுத்த வாரத்தில் இன்னும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.
