LATEST NEWS
“ஓவரா திமுகவுக்கு துதி பாடாதீங்க ஐயா” சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-ஐ கதறவிட்ட அமைச்சர் செங்கோட்டையன்… வெடித்தது உச்சகட்ட மோதல்..!!
திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது தவெக அரசை விமர்சித்துப் பேசியதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகமே பாராட்டிப் போற்றும் வகையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் தூய ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சியை ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என திமுக அமைச்சர் ஓபிஎஸ் விமர்சித்து பேசுவது மிகவும் வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது என்று சாடினார்.
மேலும் பேரவையில் காரசாரமாகப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் தனது சுயநல அரசியலுக்காக அதிமுகவில் இருந்து தற்போது திமுகவிற்குத் தனது இடத்தை மாற்றியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். அப்படித் தன் அரசியல் இடத்தை மாற்றியிருப்பதற்காகவே, தற்போது திமுக தலைமைக்கு விசுவாசமாக மாறி இவ்வாறு துதி பாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் ஓபிஎஸ்ஸை மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசினார்.
அமைச்சர்கள் இருவருக்கு இடையே சட்டமன்றத்தில் அரங்கேறிய இந்த நேரடி மோதலும், கடுமையான வார்த்தைப் போரும் பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தவெக அரசின் சாதனைகளை மூடிமறைக்க எதிர்க்கட்சியான திமுக முயல்வதாகத் தவெக தரப்பும், மக்கள் திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என திமுக தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
