LATEST NEWS
காலை உணவாக நெருப்பைத் தின்னும் கழுதைகள்.? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை.. ஆஹா சூப்பர் ஐடியாவா இருக்கே.. வியந்துபோன இணையவாசிகள்..!!
ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் இந்த கோடைகாலத்தில் கொடூரமான காட்டுத்தீ பரவி, சுமார் 2,40,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், ஸ்பெயினின் கேடலோனியா மலைப்பகுதியில் கைவிடப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளான கழுதைகளைக் கொண்டு புதுமையான முறையில் தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘திவிசா டாங்கி ஃபயர்ஃபைட்டர்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம், இந்த மீட்கப்பட்ட கழுதைகளுக்கு மறுவாழ்வு அளித்து காடுகளில் மேய விடுகிறது. இந்தக் கழுதைகள் காடுகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய காய்ந்த புற்கள் மற்றும் புதர்களைத் தின்று தீவனங்களை அழிப்பதன் மூலம், தீ பரவாமல் தடுக்கும் இயற்கையான ‘தீத்தடுப்பு பாதைகளை உருவாக்குகின்றன. 2020 ஆம் ஆண்டில் ஜோன் செடோ சான்ஸ் என்பவரால் வெறும் ஒரு சில கழுதைகளுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 62 கழுதைகளுடன் கேடலோனியா முழுவதும் பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது.
ஆடுகளுடன் ஒப்பிடும்போது கழுதைகளின் எடை அதிகம் என்பதால், அவை காடுகளில் நடக்கும்போது காய்ந்த இலைகளின் அடர்த்தியான அடுக்குகளைத் தங்களது பலமான காலடித் தடங்களால் மிதித்து உடைக்கின்றன. இது தீ வேகமாகப் பரவுவதைத் தடுக்கிறது. இந்தக் கழுதைகள் தீயணைப்பு வீரர்களுக்குப் மாற்றாகச் செயல்படாமல், அவர்கள் உருவாக்கிய பாதைகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், அவசரகாலத்தில் தீயணைப்புக் குழாய்களைக் கொண்டு செல்லவும் பெரிதும் உதவுகின்றன. விலங்குகளுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கையையும், காடுகளுக்குப் பாதுகாப்பையும் வழங்கும் இந்த இயற்கை சார்ந்த திட்டம் ஸ்பெயினில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
