LATEST NEWS
“பார்த்த உடனே பத்திக்கிச்சு”… வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை கவரும் சீரியல் நடிகை ஜனனி…!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமான ஜனனி அதனை தொடர்ந்து ஆயுத எழுத்து,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார்.
இடையே சிறிது காலம் காணாமல் போன ஜனனி தற்போது முகம் மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
