CINEMA
மகன் இறந்த துக்கம்…சாப்பாட்டை நிறுத்தி பாரதிராஜா எடுத்த கொடூர முடிவு…மரணத்தை அவரே தேடிக்கொண்டாரா?… பாரதிராஜா குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் கொடுத்த ஷாக்கிங் இன்டர்வியூ…!
இயக்குநர் இமயமும், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞனுமான பாரதிராஜாவின் மரணம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் ரசிகர்களையும் உலுக்கியுள்ள நிலையில், அவருக்குச் சிகிச்சை அளித்த பிரபல இதய நோய் நிபுணர் மருத்துவர் சொக்கலிங்கம் அவரது கடைசி கால மனநிலை குறித்துப் பகிர்ந்துள்ள விஷயங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “பாரதிராஜாவுக்குச் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. தன் உடல்நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டு, நேரத்திற்குச் சாப்பிட்டு, மருந்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டு வந்தவர் அவர். ஆனால், கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜின் திடீர் மரணம் அவருக்குத் தாங்க முடியாத பேரிடியாக அமைந்தது. புத்திர சோகம் அவரை முற்றிலும் முடக்கிப் போட்டது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் பாரதிராஜா வேண்டுமென்றே தனது வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிந்தார் என்ற அதிர்ச்சித் தகவலையும் மருத்துவர் சொக்கலிங்கம் உடைத்துள்ளார். “மகன் இறந்த நாள் முதலே அவர் தனக்குரிய மருந்துகளை உட்கொள்வதை முழுமையாக நிறுத்திக்கொண்டார். நான் அவரிடம் சென்று ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, ‘என் மகனே போய்விட்டான், இனி நான் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ எனக் கூறி வாழவே பிடிக்காமல் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் அவருக்கு ஏற்பட்ட தீவிரமான எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பசி, தூக்கம் முற்றிலும் இல்லாமல் போனது. உடலைத் தாங்கும் மனமே தளர்ந்துபோனதால், அவரது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அடிக்கடி நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது” என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையும் வீடுமாக மாறி மாறி அலைந்த பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உணவையும் தவிர்த்ததால் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டார். “உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை நாம் கொண்டாட வேண்டும் என்று நான் அவரிடம் அடிக்கடி கூறுவேன். ஆனால் அவரோ, எனக்கு அவ்வளவு காலம் வாழ விருப்பமில்லை என்பார். ‘மருந்துகளை நிறுத்திவிட்டு நீங்கள் இறந்துபோனால் உங்கள் மகன் உயிருடன் வந்துவிடுவாரா?’ என்று நான் கேட்டதற்கு, ‘வரமாட்டான்’ என்று கூறிவிட்டு அமைதியானார். ஒரு இழப்புக்கு இன்னொரு இழப்பு ஒருபோதும் ஈடாகாது” என்று உருக்கமாகக் கூறிய மருத்துவர் சொக்கலிங்கம், கடைசி காலத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே பாரதிராஜா காலமானார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ‘தாய்கிழவி’ படம் பார்த்துவிட்டு நடிகை ராதிகாவைப் பாராட்டிய வீடியோ வெளியான சில நாட்களிலேயே, வாழும் எண்ணமின்றித் தனது உயிரை மாய்த்துக் கொண்ட பாரதிராஜாவின் இந்த முடிவு அனைவர் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.
