CINEMA
“நான் குடியாரியா..? ரூ. 40 ஆயிரத்துக்கு சரக்கு குடிச்சேனா..?!” அவதூறுகளுக்கு நடிகை கஸ்தூரி அதிரடி பதில்..!!
90-களில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி சங்கர். அண்மைக்காலமாக இவர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னைப்பற்றி பரப்பப்பட்ட அவதூறான வதந்திக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் ஒரு ஹோட்டலில் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது வாங்கி குடித்ததாக ‘முக்தர்’ என்பவர் ஊடக விவாதங்களில் பேசி, தனக்கு “குடிகாரி” என்ற பட்டத்தைக் கட்டப் பார்த்ததாக கஸ்தூரி ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். பணத்திற்காகவும், சமூக ஊடகங்களில் வியூஸ்களுக்காகவும் சினிமா பிரபலங்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தவறான மனநிலை இங்கு நிலவுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய கஸ்தூரி, தான் எப்போதும் மதுப்பழக்கத்திற்கு எதிரானவர் என்றும், தன் வாழ்வில் ஒருபோதும் மது அருந்தியதே இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். உண்மையில், அவரும் அவருடைய தோழியும் ஒரு ‘லைட் மியூசிக்’ நிகழ்ச்சியில் ஜாலியாக நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை, யாரோ சிலர் தவறான முறையில் சித்தரித்து, அவர்கள் பாரில் மது அருந்துவது போல இணையத்தில் வதந்தியாகப் பரப்பியுள்ளனர் என்பதை அவர் விளக்கியுள்ளார். மேலும், வதந்திகளைப் பேசிய அந்த நபர் தற்போது வேறு காரணங்களுக்காகச் சிறையில் இருப்பதாகவும், அவர் பேசியதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்றும் கஸ்தூரி தெளிவுபடுத்தியுள்ளார்.
தன்னைப்பற்றிய வதந்திகளால் பொதுவெளியில் தொடர்பில்லாத தனது தோழி மனவேதனைக்கு உள்ளாகியிருப்பது குறித்து கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், சென்னை போன்ற பெருநகரங்களில் எண்ணற்ற பார்கள், பப்புகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அங்கெல்லாம் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் செல்கிறார்களா? அல்லது அவர்களை நம்பித்தான் அந்தத் தொழில்கள் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பார்களுக்குச் செல்லும் மற்ற சாமானியர்களை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் சினிமா பிரபலங்களை மட்டுமே குறிவைத்து குற்றம் சாட்டும் சமூகத்தின் பொதுப்புத்தியை அவர் தனது பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.
