CINEMA
அதிர்ச்சி..! பாடகி சின்மயி குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல்… மனவேதனையில் கணவர் எடுத்த முடிவு… பெரும் ஷாக்கில் ரசிகர்கள்…!!
திரைப்பட இயக்குநரும், பிரபல பாடகி சின்மயி அவர்களின் கணவருமான ராகுல் ரவீந்திரன் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அண்மையில் புனே கொலை வழக்கு தொடர்பாக இணையத்தில் எழுந்த விவாதத்தில், பெண்கள் பிரச்சினைக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் ரவீந்திரனிடம் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராகுல், சமூகத்தில் ஆணாதிக்க சித்தாந்தம் இன்னும் வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்டது பெரும் விவாதமாக மாறியது.
இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எக்ஸ் வலைதளத்தின் வழியாக ராகுல் ரவீந்திரன் – சின்மயி தம்பதியின் குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனது பச்சிளம் குழந்தைகளை நோக்கமாகக் கொண்டு விடுக்கப்பட்ட இந்த விபரீத மிரட்டல், தம்பதியினருக்குக் கடுமையான மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வரும் வழக்கமான விமர்சனங்களைத் தான் சாதாரணமாகக் கடந்து விடுவதாகவும், ஆனால் இந்தச் சம்பவம் தன்னை ஆழமாகப் பாதித்து விட்டதாகவும் ராகுல் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனிமேல் சமூக ஊடகங்கள் தனது குடும்பத்தின் மன அமைதியைக் கெடுக்கத் தான் அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறி அவர் தனது எக்ஸ் கணக்கை மூடிவிட்டு வெளியேறியுள்ளார்.
