LATEST NEWS
டெல்லியில் பயங்கரம்! ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு தெரிந்த நபரே பாலியல் தொல்லை… ரகசிய வீடியோவால் சிக்கிய மிருகம்… துணிச்சலாக இளம்பெண் எடுத்த முடிவு…!!
டெல்லியில் ஓடும் காரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிழக்கு டெல்லியில் உள்ள மாண்டவளி காவல் நிலைய போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஆள்நடமாட்டமில்லாத ஒரு பகுதிக்கு வேண்டுமென்றே ஓட்டிச் சென்ற அந்த நபர், இளம்பெண்ணிடம் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் பேசி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியமாகச் செயல்பட்டு காரில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை எதிர்கொண்டுள்ளார்.
குறிப்பாக, அந்த நபர் செய்த அத்துமீறல்களை இளம்பெண் தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த உதவும் அந்த முக்கிய வீடியோ ஆதாரத்தை அவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், போலீசார் குற்றவாளியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
