LATEST NEWS
ஐயோ நெஞ்சை பதறுது..! 6 வயது சிறுமியை நெல் வயலுக்கு இழுத்துச் சென்று.. 7 வெறிநாய்கள் செய்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டம் சிபிஹம்கஞ்ச் பகுதியில் உள்ள லட்டுரி கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி இனாயா மீது 7 முதல் 8 வெறிநாய்கள் திடீரெனக் கூட்டமாகப் பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. சிறுமியை அருகில் உள்ள நெல் வயலுக்கு இழுத்துச் சென்று நாய்கள் கொடூரமாகக் கடித்துக் குதறியதில், அவரது உடல் முழுவதிலும் பலத்த ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
बरेली: 6 साल की इनाया को कुत्तों ने नोचकर मार डालासीबीगंज के लटूरी गांव में दिनदहाड़े 7–8 खूंखार कुत्तों ने मासूम इनाया पर हमला कर उसे धान के खेत में घसीट लिया। पूरे शरीर पर अनगिनत गहरे घाव मिले। ग्रामीणों के पहुंचने तक बच्ची की मौत हो चुकी थी।बताया जा रहा है कि तीन महीने पहले भी… pic.twitter.com/Kw9sl7NiHq— Asif Ansari (@Asifansari9410) August 17, 2026
சம்பவ இடத்திற்கு கிராம மக்கள் ஓடிவந்து மீட்க முயன்றபோதிலும், அதற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் மற்றொரு குழந்தை மீதும் நாய்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள கிராம மக்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான நாய்களை உடனடியாகக் பிடித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
