LATEST NEWS
செல்ல மகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரலாகும் பெயர் சூட்டு விழாவின் அழகிய புகைப்படங்கள்..!!

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி.
அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்தார்.
இவர் விஷ்வா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.
நட்சத்திராவின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் நட்சத்திராவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவ அறைக்கு மேக்கப்புடன் சென்ற வீடியோக்கள் முதல் பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நட்சத்திரா தன்னுடைய மகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதால் இதழ் என்று பெயர் சூட்டியுள்ளார்.
மகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.