LATEST NEWS
மகளின் காதணி விழா புகைப்படங்களை வெளியிட்ட… விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்…. அழகிய புகைப்படங்கள்…!!!
தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் ஆர்வம் கொண்டு தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதனைப் போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் நடிப்பு திறமைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய க்யூட்டான சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் அவுட்டின் செல்லும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி இவரின் மகளுக்கு சமீபத்தில் காதணி விழா நடைபெற்று உள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
