மக்கள் கோவத்திற்கு யார் காரணம்?.. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்கள் கோவத்திற்கு யார் காரணம்?.. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா..??

Published

on

தமிழ் திரை உலகில் முன்னணி இசை அமைப்பாளராக திகழும் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மழை பெய்ததால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பிறகு இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என ஏ ஆர் ரகுமான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் ரசிகர்கள் அனைவரும் சிரமப்பட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆதரவு தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.

Advertisement

அதில், ஒரு கச்சேரியின் அளவிலான நிகழ்வை ஒழுங்கமைப்பது மிகவும் சிக்கலான பணி. இது தடவாலங்கள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முதல் போக்குவரத்து மேலாண்மை வரை பல நகரும் பகுதிகளை உள்ளடக்கியது. எதிர்பாராத விதமாக நிறுவன தவறுகள் உட்பட பல காரணங்களால் கூட்ட நெரிசல் மற்றும் பிற எதிர்பாராத சிக்கல்கள் இது போன்ற அளவிலான கச்சேரிகளின் போது நடந்துள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலை வெளிவருவதை காண்பது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.

திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிர பங்கை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சாக இசையமைப்பாளர் என்ற முறையில் துரதிஷ்டவசமாக நிகழ்வுகளை கருத்தில் கொண்டு ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in