LATEST NEWS
‘சார்பட்டா’ பட அம்மா நடிகை அனுபமா குமாரின் கணவர் மற்றும் மகனை பாத்துருக்கீங்களா?… உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா?…
இயக்குனர் சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர், அனுபமா குமார். மாடர்ன் அம்மா கதாபாத்திரத்தில் இருந்து, கிராமத்து வேடம், போலீஸ் அதிகாரி என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் ஒன்றி நடித்து கெத்து காட்டி வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித், வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி சற்று வித்தியாசமாக இயக்கி இருந்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. படத்தில் பாக்கியம் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். ஆர்யா பாக்ஸிங் கற்றால் அவரது தந்தை போலவே, ரவுடியாக மாறி விடுவாரோ என்கிற பயத்தில் ஒவ்வொரு முறையும் அவரை அடிப்பது,
கடைசி நேரத்தில் பாசத்தை பொழிவது. இடை இடையே ஆங்கிலத்தில் பேசி அசத்துவது என இவருடைய நடிப்பு அபாரம். இவரது நடிப்புக்கும இந்த படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் நடிகை அனுபமா சமீபத்தில் ரிலீசான சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்தை தனது மகன் மற்றும் கணவருடன் பார்த்து விட்டு புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படமானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
