LATEST NEWS
“எக்ஸாம் கிடையாது…” தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது..? முழு விவரம் இதோ…!!
திருச்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புரோகிராம் மேனேஜர், கணக்காளர் (அக்கவுன்டன்ட்), அலுவலக உதவியாளர், ஆவணப்படுத்தும் அதிகாரி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய ஐந்து வெவ்வேறான பிரிவுகளில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் தகுந்த வேலை அனுபவமும் கொண்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையவழியாக (ஆன்லைன்) மட்டுமே விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பி.எல். (B.L.) சட்டப்படிப்பு படித்து முடித்திருப்பதுடன், தொடர்புடைய துறையில் குறைந்தது ஒரு வருடமாவது பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பின் மிக முக்கிய சிறப்பம்சமாக விண்ணப்பதாரர்களுக்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வுகளும் நடத்தப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, விண்ணப்பிக்கும் நபர்களின் கல்விச் சான்றிதழ்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, அதன்பின்னர் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் (இன்டர்வியூ) அடிப்படையிலேயே தகுதியான நபர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் அனைவரும் தொடக்கமாக இரண்டு ஆண்டுகள் கால அளவுக்கு உட்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான tnnlu.ac.in என்ற முகவரியைப் பயன்படுத்தி வரும் ஜூன் 7, 2026-க்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடைசித் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
