CINEMA
ஒரே ஒரு படத்தால் மாறிய மார்ட்கெட்…சீனியர் நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா…₹10 கோடி டூ ₹15 கோடி! நயன்தாராவை விட 5 கோடி அதிகம் வாங்கும் ஜூனியர் நடிகை…
தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் வரத்து சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே வட இந்திய சந்தையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த நயன்தாரா, அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு ₹10 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாராவிற்கு, பாலிவுட்டிலும் இந்தத் தொகை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், நயன்தாராவின் இந்த சாதனையை ‘புஷ்பா’ படம் மூலம் பான்-இந்திய அளவில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா அசால்ட்டாக முறியடித்துள்ளார். பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ராஷ்மிகாவின் மார்க்கெட் அசுர வேகத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டின் மிக எதிர்பார்ப்பிற்குரிய புதிய திரைப்படமான “Cocktail 2” படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ஒட்டுமொத்தமாக ₹15 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் நயன்தாராவை விட மிகவும் ஜூனியரான ராஷ்மிகா மந்தனா, அவரை விட ₹5 கோடி அதிகமாகப் பெற்று பாலிவுட்டில் தற்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார். சீனியரான நயன்தாரா, சல்மான் கான் படத்திற்கே ₹10 கோடி வாங்கும் நிலையில், ராஷ்மிகாவின் இந்தத் திடீர் சம்பள உயர்வு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியத் திரையுலகம் முழுக்க “நயன்தாராவை முந்திய ராஷ்மிகா” என்ற பேச்சுதான் ஹாட் டாபிக்காகத் தீயாய் பரவி வருகிறது.
