CINEMA
அக்கா எடுத்த அந்த அதிர்ச்சி முடிவு…தம்பியா எனக்குக் கோபமும் வருத்தமும் இருந்தது…கரியர் உச்சத்தில் இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய தேவயானி…அக்கா கணவர் ராஜகுமாரன் குறித்து முதன்முறையாக ஓப்பனாகப் பேசிய நடிகர் நகுல்…!
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமாரனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ‘சூர்யவம்சம்’, ‘பாரதி’, ‘பாட்டாளி’ போன்ற எண்ணற்ற சூப்பர்ஹிட் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். இவர்களது திருமணத்திற்கு தேவயானியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்திவரும் தேவயானியின் இந்த பழைய திருமண விவகாரம் குறித்து, அவரது தம்பியும் நடிகருமான நகுல் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய நகுல், “அக்காவின் அந்த திடீர் முடிவின்போது ஒரு தம்பியாக எனக்குக் கோபமும் வருத்தமும் ஏற்பட்டது இயல்புதான். அந்தக் காலத்தில் எனக்கு இது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி இல்லை; அக்கா எடுத்த முடிவு எனக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காலம் கடந்த பிறகுதான் தனக்கு அந்தப் முதிர்ச்சி வந்ததாகக் கூறிய அவர், அக்கா இப்போது தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது மட்டும்தான் தனக்கு முக்கியம் என்றும், தேவயானியின் கணவர் ராஜகுமாரன் மிகவும் நல்ல மனிதர் என்றும் அவரைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ராஜகுமாரன் தன்னை எப்போது சந்தித்தாலும் மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார் என்று நெகிழ்ந்த நகுல், அவர் மீது தனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த நகுல், அக்கா குடும்பத்தின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று இந்த பேட்டியில் முதிர்ச்சியோடு பேசியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
