LATEST NEWS
இதுதான் உங்க ஜனநாயக ஆட்சியா சிஎம் சார்?…’GENZ DMK’ ஒருங்கிணைப்பாளர் நள்ளிரவில் அதிரடி கைது…நைட்டானா பயந்துடுறீங்க…நள்ளிரவு கைது விவகாரத்தில் முதலமைச்சரை வெளுத்து வாங்கிய ஜூலி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!
‘GENZ DMK’ கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நள்ளிரவு கைது விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்து கூறுபவர்களை நள்ளிரவில் ஒடுக்கும் இத்தகைய செயலைக் கண்டித்து, பிக் பாஸ் புகழ் ஜூலி தனது சமூக வலைதள பக்கத்தில் மிகக் காட்டமான கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள ஜூலி, “நேற்று இரவு 12 மணி அளவில் அன்பாநந்தன் அரியப்பனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவரது உறவினர்கள் வாரண்ட் கேட்டதற்கு, ஸ்டேஷனுக்கு வந்தால் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். உங்களுக்கு எதிராக ஒரு கருத்தைப் பதிவு செய்தால், அவர்களை இப்படித்தான் நள்ளிரவில் ஒடுக்குவீர்களா? இதுதான் உங்களுடைய ஜனநாயக அரசாங்கமா சிஎம் சார்?” என்று தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு பெண் புகார் அளித்தும் எம்.எல்.ஏ சரவணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றும், கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“சட்டப்பேரவையில் மாஸாகப் பேசிவிட்டு, இரவானதும் பயந்து போய் நள்ளிரவில் கைது நடவடிக்கை எடுக்கிறீர்களே” என்று விமர்சித்துள்ள ஜூலி, இத்தகைய அடக்குமுறைகளைப் பார்த்து தாங்கள் பயந்து சும்மா இருக்கப் போவதில்லை என்றும், இன்னும் தைரியமாகத் தங்கள் கருத்துக்களைச் சோசியல் மீடியாவில் பதிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களுக்குப் பதில் சொல்லாமல், எங்களை அடக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக உருப்படியாக வேலை பாருங்கள் என்று தமிழக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஜூலி வெளுத்து வாங்கியுள்ளார்.
