CINEMA
எந்த நேரத்துல எதை செய்யணும் என்கிற விவஸ்தையே இல்லையா? – மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கூல் சுரேஷ், கையில் கொண்டு வந்த பொருளை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்!
எதையும் வித்யாசமாக செய்கிறேன் என்ற பெயரில் சிலர் செய்யும் கோணங்கித்தனமான விஷயங்கள்தான் சில நேரங்களில் பெரிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி விடுகிறது. முந்தானை முடிச்சு படத்தில் தன்னை விரும்பாத கணவனை தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் மனைவி, முருங்கைகாய் சமைத்து தருவது போல் ஒரு காட்சியை இயக்குனர் கே பாக்யராஜ் எடுத்து அந்த காட்சியில் அவரும் ஊர்வசியும் நடித்திருந்தனர்.
அப்போது காமெடியாக அது ரசிகர்கள் மத்தியில் பேசி பிரபலமானது. ஆனால் அந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக கே பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கூல் சுரேஷ் கையில் ஒரு கட்டு முருங்கைகாயையும் எடுத்து வந்திருந்தார். நான் எடுத்து வந்த பொருளை யாரும் விமர்சனம் செய்யாதீங்க என்றும் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஒரு துக்கமான நேரத்தில் இதுபோன்ற சேட்டைகளை அவர் செய்வது சரிதானா என்று நெட்டிசன்கள் பலரும் கூல் சுரேஷை விமர்சித்துள்ளனர்.
