CINEMA
திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ் மறைவு, குரு மறைந்த 2 வாரங்களில் சிஷ்யனும் மறைந்தார் – மீளா சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் சீனியர் டைரக்டர் மற்றும் மூத்த நடிகராக வலம் வந்த கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர் மறைந்துள்ளார். இவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ். மகன் சாந்தணு மகள் சரண்யா. இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழ் பெற்றவர் கே பாக்யராஜ்.
ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கே பாக்யராஜ். பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் இன்று போய் நாளை வா சின்ன வீடு என ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியர் கே பாக்யராஜ். அவரது படங்களில் அவரே நாயகனாகவும் நடித்தார்.
எம்ஜிஆர் மீது அதிக அன்பும் மரியாதையும் கொண்டவர் கே பாக்யராஜ். என்னுடைய கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று காலை கே பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த மாதம் 10ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். தனது குருநாதர் மறைந்த 2 வாரங்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார் என்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
