CRIME
“22 வயசு ஆச்சு ஆனா இன்னும்” வாயில் ஆசிட்டை ஊற்றிய தாய்.. கழுத்தை நெரித்த தந்தை… உறவினர்கள் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்.. மகன் கொலையில் அதிர்ச்சி பின்னணி..!!
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை எதுவும் இல்லாமல் இருந்த இவருக்குச் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் 2026 இறுதி வாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ராமின் பெற்றோர் அவரைத் தேசாவரம் குடிக்க வைத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பின்னர் இந்தச் சம்பவத்தைத் தற்கொலை என்று காட்டி, அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளையும் பெற்றோர் முடித்துள்ளனர். இருப்பினும், ராமின் 20 வயது இளம் மனைவி பன்சிக்குத் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குப் பிறகு உறவினர்கள் சிலர் கூறிய உண்மைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஃபொரன்சிக் (Forensic) பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ராம் ஆசிட் குடித்து இறக்கவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்பதும் அறிவியல் பூர்வமாக உறுதியானது.
காவல்துறையின் விசாரணையில், மது போதையில் தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் தாய் மனிஷா வாய் வழியே கட்டாயப்படுத்தி ஆசிட்டை ஊற்றியதும், மகன் அலறியபோது தந்தை பாபு பாம்பவா அவரின் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பெற்றோர் இருவரையும் கடந்த ஜூலை 2 அன்று காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கொலைக்குக் காரணமான ஆசிட் பாட்டில் மற்றும் சான்றுகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
