CRIME
இது நியாயமா..? தங்கத் திருட்டு வழக்கில் வாலிபரை மிருகத்தனமாக உதைத்த கூட்டம்… குழந்தையைக் காட்டித் தப்பிக்க முயன்றதால் இணையத்தில் எழுந்த அனுதாபம..!!
குவாலியர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து பெண்ணின் தங்கக் கம்மல்கள் மற்றும் சில விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடியதாக ஒரு நபர் அங்கிருந்த பொதுமக்களிடம் கைகளுமாகப் பிடிபட்டார். திருட்டுச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மக்கள், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அந்த நபரைச் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். சிலர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி, சினிமா ஸ்டண்ட் காட்சிகளைப் போல அவரது முகத்தில் கால்களால் எட்டி உதைத்து மிக மோசமாகத் தாக்கினர்.
இந்தத் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதே, சம்பவ இடத்திற்கு அந்த நபரின் மனைவியும் சிறிய குழந்தையும் வந்தனர். கூட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அந்த நபர் தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஒரு கேடயமாகப் பயன்படுத்த முயன்றார். தப்பியோட முயன்ற அவரைத் தடுத்து நிறுத்தித் தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், பின்னர் அவரை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றம் என்றாலும், ஒரு மனிதனை மிருகத்தனமாகக் கூட்டுச் சேர்ந்து தாக்குவது “கொலை முயற்சிக்கு” சமம் என்றும், சிறு குழந்தையின் முன்னிலையில் இப்படித் தாக்குவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் பலர் கூட்டத்தின் செயலைக் கண்டித்து அந்த நபருக்கு ஆதரவாக அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்; அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் திருடனைத் தண்டித்த பொதுமக்களின் செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.
