LATEST NEWS
ஆசிரியர் செய்யும் காரியமா இது? மகள் எழுதிய ரகசிய டைரி… உள்ளே இருந்த அதிர்ச்சி உண்மை… கதறி அழுத பெற்றோர் – பதறவைக்கும் பின்னணி..!!
புளோரிடாவில் உள்ள நார்த் போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 51 வயதான டேவிட் சோமர் என்பவர், தனது பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் ரகசிய நாட்குறிப்பை அவரது பெற்றோர் தற்செயலாகப் படித்ததன் மூலமே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கோடைக்காலப் பயிற்சி முகாமில் மாணவியின் செல்போன் எண்ணைப் பெற்ற அந்த ஆசிரியர், ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசத் தொடங்கி, பின்னர் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் ஆபாசப் புகைப்படங்களைக் கேட்டதுடன், 2026 மார்ச் மாத வாக்கில் அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் வெளிவந்ததைத் தொடர்ந்து, முன்னாள் மாணவிகளும் அந்த ஆசிரியர் மீதான தங்களது பழைய புகார்களைப் பத்திரிகையாளர்களிடம் முன்வைத்துள்ளனர். மேடை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையின்போது மாணவிகள் மீது வேண்டுமென்றே சாய்வதும், தேவையற்ற முறையில் தொட்டுப் பழகுவதும் அவரது வழக்கம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நிகழ்ச்சிகளுக்கான ஆடைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி, பாடகர் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி எண்களை அவர் தொடர்ந்து வாங்கி வந்ததாகவும் முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த இசை ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
