LATEST NEWS
“மீண்டும் ஒரு 2008 திக் திக் நிமிடங்கள்?.. நள்ளிரவில் அதிரடி போன் கால்… தாஜ் ஹோட்டலை டார்கெட் செய்த தாவூத் கும்பல்?.. பதறவைக்கும் பின்னணி..!!
மும்பை தாஜ் ஹோட்டலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றிரவு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஹோட்டல் வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சோதிக்கப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. முழுமையான ஆய்வுக்குப் பிறகு, இந்த மிரட்டல் வெறும் புரளி என்று காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மக்கள் நிம்மதியடையச் செய்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு இதே தாஜ் ஹோட்டலில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கசப்பான வரலாற்றுச் சுவடுகள் இன்னும் மறைந்துவிடாத நிலையில், மீண்டும் அதே ஹோட்டலுக்கு விடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டல் மும்பை மாநகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த போலி மிரட்டல் அழைப்பை விடுத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
