LATEST NEWS
“இந்த வார இறுதியில்.. தாங்கவே முடியாது அளவுக்கு அடிப்போம்..” ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு உத்தரவிட்ட டொனால்ட் டிரம்ப்.. பதறும் உலக நாடுகள்..!!
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையானபுதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். ஈரானை உடனடியாகச் சரணடைய வைக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுஆயுத முயற்சியைத் தடுக்கும் வகையிலும், தங்களின் வெற்றி உறுதியாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலுக்கான இறுதி உத்தரவில் அதிபர் டிரம்ப் இன்னும் கையொப்பமிடவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்க-ஈரான் போரினால், உலகளவில் பெரும் பொருளாதார முடக்கமும் ஸ்திரமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேசச் சந்தையில் கடும் நெருக்கடி நிலவுகிறது. மேரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானின் பொய் மற்றும் தவறான அணுகுமுறைகளால் அவர்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டதுடன், இந்த வார இறுதியிலேயே புதிய மற்றும் மிகக் கடுமையானத் தாக்குதல்கள் அரங்கேறக்கூடும் என்ற தகவல்களையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
