LATEST NEWS
கவலைப்படாதீங்க பாஸ்..! விஜயபாஸ்கருக்கு ‘அந்த’ பதவி உறுதி…. கிரீன் சிக்னல் கொடுத்த அமைச்சர் என்.ஆனந்த்… அதிமுகவினர் மத்தியில் உச்சகட்ட பரபரப்பு..!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவின் உட்கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவிலிருந்து வந்து இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு உண்டான தகுதியான மற்றும் உரிய பதவியை முதலமைச்சர் விஜய் நிச்சயம் வழங்குவார் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தவெகவில் இணைந்துள்ள மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய அமைச்சர் ஆனந்த், முதலமைச்சர் விஜய்யை நம்பி மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெகவிற்கு வந்தவர்கள் யாரையும் கட்சித் தலைமை ஒருபோதும் கைவிடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தவெகவில் இணைந்துள்ள ஒவ்வொரு புதிய நிர்வாகியும், தொண்டரும் தங்களது சொந்தக் குடும்பத்தில் ஒருவர் போன்றவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், மரியாதையும் கட்சியில் முறையாக வழங்கப்படும் என்றும் கூறினார்.
இருப்பினும், தவெகவில் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமைதோறும் பெருமளவில் இணைந்து வருவதால், தங்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான முக்கிய பதவிகள் கிடைக்குமா என்ற குழப்பம் இன்னும் சில அடிமட்ட அதிமுக முன்னாள் நிர்வாகிகளிடம் நீடித்து வருகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் களப் பணிகளை முன்னிட்டு, தகுதியானவர்களுக்கு மிக விரைவில் கட்சிப் பதவிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தவெக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
