LATEST NEWS
ஐயோ கொடுமையே..! மயங்கி விழுந்த ஆசிரியை.. காப்பாற்ற வந்த இளைஞர்கள் செய்த விபரீதக் காரியம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. மருத்துவமனையில் டாக்டர் சொன்ன திடுக்கிடும் தகவல்..!!
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் கைலாரஸ் பகுதியில், 41 வயதான பள்ளி ஆசிரியை லலிதா தாகத் என்பவர் கடும் வெப்பம் காரணமாகத் தலைசுற்றல் ஏற்பட்டுத் தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி வழியாக வந்த இரு இளைஞர்கள், சாலையோரத்தில் சுயநினைவின்றிக்கிடந்த ஆசிரியையைக் கண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தவறாகக் கணித்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், அந்த இடத்திலும் உடனடியாக முதலுதவி அளிப்பதாக எண்ணி அவரது மார்பில் தொடர்ந்து தீவிர அழுத்தம் கொடுத்தனர்.
चक्कर आने से गिरी शिक्षिका को हार्ट अटैक समझकर CPR दिया गया, जिससे उनकी दो पसलियां टूट गईं।
मध्य प्रदेश के कैलारस में शिक्षिका ललिता गर्मी के कारण स्कूटी से गिर गईं। वहां मौजूद दो युवकों ने उन्हें हार्ट अटैक समझकर लगातार CPR देना शुरू कर दिया।
अस्पताल में जांच के बाद डॉक्टरों… pic.twitter.com/TUitiOzuXn— Mandeep RajBhar (@MandeepRajBhar9) July 31, 2026
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆசிரியையைப் பரிசோதித்த வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷ் சர்மா தலைமையிலான குழுவினர், அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர். ஆனால், சிகிச்சைக்குப் பிறகு ஆசிரியை கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்டதால் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அவரது இரண்டு விலா எலும்புகள் முறிந்திருந்தது தெரியவந்தது. இளைஞர்கள் முறையான பயிற்சியின்றி நீண்ட நேரம் தவறான வழியில் மார்பை அழுத்தி முதலுதவி அளித்ததே இந்த எலும்பு முறிவுக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த இளைஞர்கள் நல்லெண்ணத்துடனும் ஆசிரியையின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடனும் செயல்பட்டபோதிலும், இந்தச் சம்பவம் முறையான சிபிஆர் பயிற்சியின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. தவறான முறையில் அளிக்கப்படும் மார்பு அழுத்தங்கள் விலா எலும்பு முறிவு மற்றும் உள் உறுப்புகளுக்குச் சேதம் போன்ற தீவிர காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாரடைப்பின் அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிவது மற்றும் சரியான முறையில் முதலுதவி அளிப்பது குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
