CRIME
அடப்பாவி..! வீட்டிற்குள்ளேயே கள்ளக்காதலனின் சடலம்.. கணவனுடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்… நெஞ்சைப் பதறவைக்கும் லைவ் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் தால்மாவ் காவல் எல்லைக்குட்பட்ட முஸ்தபாபாத் பெல்ஹானி கிராமத்தில் உள்ள பூரே ராஜாவ் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரீதா என்ற பெண், தனது கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனைக் கொலை செய்து, உடலைத் தங்கள் வீட்டின் உள்ளேயே புதைத்ததாகப் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளி உலகிற்குத் தெரியவந்தது.
A woman allegedly conspired with her husband to murder her lover and bury the body inside their house in Uttar Pradesh’s Raebareli district, police said.
The incident came to light after villagers noticed a foul smell emanating from the house and alerted the police.
Acting on… pic.twitter.com/Fp3EiAinRQ— Hate Detector 🔍 (@HateDetectors) August 1, 2026
தகவலறிந்து வந்த காவல்துறையினர், வீட்டின் வளாகத்திற்குள் புதைக்கப்பட்டிருந்த உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ரீதாவிற்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ரீதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கணவரைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர் மேல்விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
