CRIME
அய்யோ கொடுமையே..! பாட்டி வீட்டுக்குச் சென்ற 2 வயது சிறுமி.. தேடிய குடும்பத்தினருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
லக்னோவில் பாட்டி வீட்டிற்கு வந்த 2 வயது சிறுமி, தண்ணீர் நிரம்பிய டப்பில் விழுந்து மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத நேரத்தில், தவறி விழுந்த குழந்தையை நீண்ட நேர தேடலுக்குப் பிறகு டப்பில் இருந்து மீட்டனர். பதற்றமடைந்த தாய் மயக்கமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
குடும்பத்தினரின் சிறிய கவனக்குறைவால், அந்த வீட்டின் மகிழ்ச்சியாக இருந்த பிஞ்சு உயிர் பிராணன் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான சம்பவம், குழந்தைகளைச் சுற்றி எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களை பாதுகாப்பற்ற முறையில் வைக்கக் கூடாது என்பதையும் உணர்த்துகிறது.
