அடேங்கப்பா..! ஆட்டோ ஓட்டினால் ரூ.3 கோடி சம்பாதிக்கலாமா..? அலமாரியைத் திறந்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

அடேங்கப்பா..! ஆட்டோ ஓட்டினால் ரூ.3 கோடி சம்பாதிக்கலாமா..? அலமாரியைத் திறந்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் கோபால்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் லோக்யுக்தா அமைப்பு அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, டிஎஸ்பி கமல் சிங் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக லோக்யுக்தா எஸ்பி துர்கேஷ் ரத்தோர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சமூக ஊடகங்களில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட நபர்களைத் தேடி ஓட்டுநர் சௌரப் அகிர்வாரின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்குள்ள அலமாரியில் 4 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.3.02 கோடி ரொக்கப் பணத்தைக் கண்டுபிடித்தனர்.

सागर, मध्यप्रदेश

ऑटो चालक के घर से मिले 3 करोड़ से अधिक कैश मामले की लोकायुक्त जांच शुरू, 5 सदस्यीय SIT गठित pic.twitter.com/S3mLmFX43P— Gaurav Kumar (@gaurav1307kumar) August 20, 2026

இந்தப் பெரும் தொகை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சௌரப் கூறுகையில், இந்த பணம் பொதுப்பணித்துறை பொறியாளராக பணிபுரியும் தனது உறவினர் ரமேஷ் அகிர்வாரைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பொறியாளர் ரமேஷ் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளதால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவானது, இந்த பணத்தின் உண்மையான உரிமையாளர் யார், இதற்கான வருமான ஆதாரம் என்ன மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in