CRIME
பெற்றோர்களே உஷார்..! “பாப்பாவுக்கு பேய் பிடிச்சிருக்கு சடங்கு செய்யணும்” என நாடகமாடி 15 வயது சிறுமியை சீரழித்த 45 வயது நபர்.. திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில், 15 வயது சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, 45 வயதுடைய போலி ஹீலர் ஒருவர் அச்சிறுமியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். மாற்று மருத்துவ சிகிச்சை அளிப்பதாக நம்ப வைத்து, சிறுமிக்குத் தொடர்ச்சியாக இந்த அத்துமீறலை அவர் செய்துள்ளார்.
சிறுமி தனது பெற்றோரிடம் இக்கொடூர சம்பவம் குறித்துக் கூறியதைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான (போக்ஸோ) கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரைச் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற போலியான மாற்று மருத்துவ சிகிச்சையாளர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
